லண்டனில் தாக்குதல் நடத்தவிருந்ததாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பலரை இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
லண்டனில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இங்கிலாந்து காவல் துறை தெரிவித்துள்ளதாவது,
லண்டனில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயன்றதாக ஈரானைச் சேர்ந்த 5 பேர் சனிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர். இவர்களின் வயது 29 - 45க்குள் இருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதேபோன்று ஈரான் குடியுரிமை வைத்திருந்த மேலும் 4 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்தது.
இதோடுமட்டுமின்றி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக லண்டனில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த 39, 44 மற்றும் 55 வயதுடைய மேலும் மூவரை இன்று கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டை பாதுகாக்கும் வகையில் காவல் துறை மற்றும் உளவு அமைப்புகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கனடா அரசு அறிவிப்பு

பிரிட்டனில் ‘தீவிர’ பயங்கரவாத அச்சுறுத்தல்! யூதா்கள் மீதான தாக்குதல் எதிரொலி!!

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தும் இந்தியா!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


