சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம் - துருக்கி அதிபர்

இந்தியாவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் துருக்கி.. பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு!

News image
பாகிஸ்தான்- AP
Updated On :15 மே 2025, 11:41 am

DIN

இஸ்தான்புல்: பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற தீவிர சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை தாக்க ட்ரோன்களை பயன்படுத்தியது. பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் துருக்கியிலிருந்து அந்நாட்டுக்கு வழங்கப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், பாகிஸ்தானுகு துருக்கி ராணுவ உதவி புரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது. ஆனால், துருக்கியில் இருந்து கராச்சிக்கு 6 டி-130இ ஹொ்குலஸ் விமானங்கள் வந்ததாகக் வான்வழியாக விமானங்கள் பறப்பதைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததால் துருக்கி இந்தியர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

துருக்கிக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக இந்தியர்கள் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்நாட்டின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் பலர், துருக்கிக்கு செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். அந்நாட்டு பொருள்களை வாங்க வேண்டாமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்புக்கு அனுப்பியுள்ள செய்தியில், பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் எப்போதும் துணை நிற்போம் என்று உறுதியளித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.