வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காஸா போர்: கடந்த 2 நாள்களில் 300 பேர் பலி!

காஸாவை முழுமையாகக் கைப்பற்ற ஆயத்தம் - இஸ்ரேல் தீவிர தாக்குதல்...

News image

காஸா மக்கள் பரிதாப நிலையில் - படம் | AP/

Updated On :17 மே 2025, 11:39 am

காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் ஊடுருவி அங்குள்ள சுமார் 250 மக்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினர் காஸாவுக்கு பிடித்துச் சென்றதுடன், அவர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காஸாவில் பல்வேறு கட்டமாக தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, காஸாவில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதன் வெளிப்பாடாய், கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களில் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்து விட்டதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த உயிரிழப்பு 53,000த்தை கடந்துள்ளது என்று காஸா சுகாதாரத் துறை தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.