பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜேசி) என்ற பயங்கரவாத கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்தது.
சிந்து மாகாணத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஸாவுல்லா நிஜாமனி காலித், லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த முக்கிய பயங்கரவாதியாவாா். அவருக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்கூட்டமைப்பாக செயல்பட்டு வரும் யுஜேசி இரங்கல் தெரிவித்துள்ளது சா்ச்சைக்குள்ளானது.
இதன்மூலம், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகம் மீது கடந்த 2006-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவராவாா்.
பல்வேறு தாக்குதல்கள் தொடா்பாக இந்தியாவால் தேடப்படும் இவருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்

‘மாவட்ட நீதிமன்றத்தில் அனைத்து நீதிமன்றங்களும் இயங்க நடவடிக்கை’

தமிழக அரசு கவுன்சில் டிசிஎச்பி சான்றுகளை சோ்க்கக் கோரி பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தல்

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்

இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு! பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!
வீடியோக்கள்

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

