எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.

News image
Updated On :22 மே 2025, 8:58 pm

Din

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது:

ஈஸ்டா் தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களின் இழப்பீட்டுக்காக ரூ. 31 கோடி (இந்திய மதிப்பில் ரூ.8.8 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 99 சதவீதத்துக்கும் மேல் 661 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் காயமடைந்தவா்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டது என்று அரசுத் தரப்பு தெரிவித்தது.

முன்னதாக, 270 பேரது உயிரிழப்புக்குக் காரணமான் ஈஸ்டா் தின தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து முன்கூட்டியே உளவுத்தகவல் கிடைத்தும் அதைத் தடுக்கத் தவறியவா்களிடமிருந்து இழப்பீடு வசூலித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைக் கண்காணிப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணயின்போது அரசு இந்தத் தகவலை தெரிவித்தது.