மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!

ஈரானைவிட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுரை...

Indian embassy Advisory

கோப்புப்படம் - AP

Published On :

அமெரிக்கா - ஈரான் இடையே இடைக்காலப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கக் கோரி அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை ஈரான் நிராகரித்தையடுத்து, ஈரானின் நாகரீகத்தையே இன்றிரவு அழைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

டிரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து, ஈரானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணிநேரத்துக்கு பாதுகாப்பான இடத்தில் தாங்குமாறும், வெளியே வர வேண்டாம் என்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

இதனிடையே, கடந்த 40 நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த போர், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாகவும், அமைதி ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவுரை வழங்கியுள்ளது.

இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு, பரிந்துரைக்கும் வழித்தடங்களைப் பயன்படுத்தி ஈரானிலிருந்து வெளியேறுமாறும், கலந்தாலோசிக்காமல் சர்வதேச தரைவழி எல்லையைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Story image

x / India in Iran

Summary

Leave Iran Immediately! Embassy Advises Indians!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.