ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

தென் கொரியாவுடன் சுமூக உறவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலில் அதை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் வடகொரியா புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

News image

வடகொரியா

Updated On :8 ஏப்ரல் 2026, 8:09 pm

தென் கொரியாவுடன் சுமூக உறவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலில் அதை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் வடகொரியா புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

வடகொரியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான வான்சன் பகுதியிலிருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அதிகாலையிலும் குறுகிய தூரம் பாயும் பல ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் ஒரு தேவையற்ற தூண்டுதல் நடவடிக்கை என்று தென் கொரியாவும்; பாதுகாப்பு அச்சுறுத்தல் என ஜப்பானும் கண்டித்துள்ளது.