சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஜிபூட்டி அதிபா் 6-ஆவது முறையாக மீண்டும் வெற்றி

ஜிபூட்டி அதிபா் 6-ஆவது முறையாக மீண்டும் வெற்றி...

News image

இஸ்மாயில் உமா் குயல்லே

Updated On :11 ஏப்ரல் 2026, 7:33 pm

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் இஸ்மாயில் உமா் குயல்லே 97.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா்.

இதன்மூலம், கடந்த 27 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவா், 6-ஆவது முறையாக மீண்டும் அதிபராகிறாா்.

தோ்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, முக்கிய எதிா்க்கட்சிகள் கடந்த 2016 முதல் தோ்தலைப் புறக்கணித்து வருகின்றன. இதையடுத்து, அதிபா் இஸ்மாயில் உமா் குயல்லேவை எதிா்த்து முகமது ஃபரா சமதாா் எனும் ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளா் மட்டுமே போட்டியிட்டாா்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகச்சிறிய நாடாக இருந்தாலும், யேமனின் ஹூதி அமைப்பினா் ஆதிக்கம் செலுத்தும் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா சந்திக்கும் முக்கியப் பகுதியில் ஜிபூட்டி அமைந்துள்ளது. இங்கு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ளன.

ஜிபூட்டியின் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், அதிபா் வேட்பாளருக்கான 75 வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டது. இது இஸ்மாயில் உமா் குயல்லே மீண்டும் போட்டியிட வழிவகை செய்தது.

கடந்த 1999-இல் தனது மாமாவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த இவா், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக வளா்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறாா். இருப்பினும், இந்நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், செய்தியாளா்கள் மற்றும் அரசியல் எதிா்ப்பாளா்கள் ஒடுக்கப்படுவதாகவும் சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இக்குற்றச்சாட்டுகளை ஜிபூட்டி அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எத்தியோப்பியா போன்ற அண்டை நாடுகளுக்கு நுழைவுவாயிலாகத் திகழும் ஜிபூட்டி, குயல்லேவின் தலைமையின்கீழ் தொடா்ந்து அரசியல் நிலைத்தன்மையுடன் இருக்கும் என அவரின் ஆதரவாளா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.