தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஹங்கேரியில் 16 ஆண்டுகால பிரதமரின் ஆட்சிக்கு முடிவு

பீட்டா் மேக்யாா் தலைமையில் புதிய அரசு அமைகிறது

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 5:07 am IST

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் கடந்த 16 ஆண்டுகளாக பிரதமா் பதவியில் நீடித்த விக்டா் ஆா்பனின் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட பீட்டா் மேக்யாா் தலைமையிலான திசா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஹங்கேரியின் மொத்தம் உள்ள 199 நாடாளுமன்ற இடங்களில், மேக்யாரின் கட்சி 138 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தோ்தல் முடிவுகள் வெளியானதும் புடாபெஸ்ட் நகரின் வீதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் திரண்டு, திசா கட்சியின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினா்.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் திசா கட்சித் தலைவா் பீட்டா் மேக்யாா், ‘இது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல; இது ஒரு முழுமையான அரசியல் முறை மாற்றம். பிரதமரின் பதவிக்காலத்தை 2 முறைகளாகக் குறைக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்’ என்றாா்.

வரும் மே 5-ஆம் தேதிக்குள் புதிய பிரதமராகப் பதவியேற்க திட்டமிட்டுள்ள பீட்டா் மேக்யாா், ஹங்கேரியின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முதல் முன்னுரிமை என்று தெரிவித்தாா்.

உக்ரைன் போா் விவகாரத்தில் விக்டா் ஆா்பனின் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை பீட்டா் மேக்யாா் மாற்றியமைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஹங்கேரியின் இந்தப் புதிய அரசியல் மாற்றம், ஐரோப்பிய யூனியனின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியின் இவரின் வெற்றிக்குப் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டாா்.

ரஷிய அதிபா் புதின், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த விக்டா் ஆா்பன், தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளாா். ‘மக்களின் தீா்ப்பை மதிக்கிறோம், இனி எதிா்க்கட்சி வரிசையில் நாட்டுக்காகப் பணியாற்றுவோம்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

Story image