தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அந்தமான் கடலில் கவிழ்ந்த ரோஹிங்கியா அகதிகள் படகு! 250 பேரின் நிலை என்ன?

அந்தமான் கடலில் 250 ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது குறித்து...

News image

அந்தமான் கடல் பகுதியில் ரோஹிங்கியா அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து... (கோப்புப் படம்) - AFP

Updated On :15 ஏப்ரல் 2026, 11:12 am

அந்தமான் கடல் பகுதியில், ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேச நாட்டினர் உள்பட சுமார் 250-க்கும் அதிகமானோர் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் டெக்னாஃப் நகரத்தில் இருந்து கடந்த ஏப். 4 அன்று சுமார் 280 ரோஹிங்கியா மற்றும் வங்கதேச அகதிகள் பயணித்த படகு ஒன்று மலேசியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தமான் கடல்பகுதியில் வீசிய பலத்த காற்று மற்றும் ராட்சத அலைகளில் சிக்கி அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச கடலோரக் காவல்படையின் எம்.டி. மேக்னா பிரைட் எனும் கப்பல் மூலம் சுமார் 36 மணிநேரத்துக்குப் பிறகு ஏராளமான அகதிகள் மீட்கப்பட்டதாகவும், இந்தோனேசியா சென்ற மற்றொரு அகதிகள் படகு கடலில் தத்தளித்த ஒரு பெண் உள்பட 9 பேரை மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்தக் கப்பலில் பயணித்து மாயமான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 250 பேரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த மீட்புப் பணிகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, மியான்மர் நாட்டின் சிறுபான்மையின ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், ஏராளமான ரோஹிங்கியா மக்கள் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு மியான்மர் கடல்பகுதியில் நடைபெற்ற 2 வெவ்வேறு படகு விபத்துகளில் சுமார் 427 ரோஹிங்கியா அகதிகள் பலியானதாக, ஐ.நா. அகதிகள் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

boat carrying more than 250 people including Rohingya refugees and Bangladeshi nationals capsized and sank in the Andaman Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.