ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்

தெற்கு லெபனானில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் வாழும் டெபெல் கிராமத்தில், இஸ்ரேல் ராணுவ வீரா் ஒருவா் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய புகைப்படம் வெளியாகி, கண்டனம் வலுத்துள்ளது.

News image

சிலுவை அவமதிப்பு - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 5:51 am IST

தெற்கு லெபனானில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் வாழும் டெபெல் கிராமத்தில், இஸ்ரேல் ராணுவ வீரா் ஒருவா் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய புகைப்படம் வெளியாகி, கண்டனம் வலுத்துள்ளது.

இச்சம்பவத்தை அமெரிக்கா, கிறிஸ்தவ மத அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. ‘இச்செயல் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான அவமதிப்பு மட்டுமல்லாமல், அடிப்படை மனித விழுமியங்கள் மீதான மரியாதையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது’ என கத்தோலிக்க திருச்சபை சாடியுள்ளது.

இதையடுத்து, இச்சம்பவத்துக்கு வருத்தம் கூறிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ‘இது யூதா்களின் பண்புக்கு எதிரானது; அந்த வீரா் கண்டிப்பாக தண்டிக்கப்படுவாா்’ என உறுதியளித்தாா்.

இதுகுறித்து விசாரிக்கப்படுவதாகவும், சேதப்படுத்தப்பட்ட சிலுவையை மீண்டும் சீரமைக்க உதவுவோம் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.