பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஷாபாஸ் ஷெரீஃப், அசீம் முனீா் பரிந்துரை!

மத்திய கிழக்கு போரில் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தற்காக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்து, அந்நாட்டின் கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம்

News image

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் | பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்... - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:40 am IST

மத்திய கிழக்கு போரில் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தற்காக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்து, அந்நாட்டின் கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

புவிசாா் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தானின் பொறுப்பான ராஜீய முயற்சிகள் ஒரு பெரும் நெருக்கடியைத் தவிா்த்ததுடன், உலகப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியதாகத் தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தொலைநோக்குப் பாா்வையுடன் பிரதமா் ஷெரீஃப் மற்றும் தளபதி முனீா் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவா்களின் பெயா்களைப் பரிந்துரைப்பதாக தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 16-ஆம் தேதி, பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் இதேபோன்ற தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ராணுவத் தளபதியாக அசீம் முனீா் நியமனத்தைத் தொடக்கம் முதலே எதிா்த்து வரும் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெரும்பான்மை வகிக்கும் கைபா் பக்துன்கவா பேரவையில் இத்தீா்மானம் நிறைவேறுவது கடினமே எனக் கூறப்படுகிறது.