‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பாகிஸ்தான் பிரதமா் இன்று சீனா பயணம்

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சனிக்கிழமை (மே 23) புறப்படுகிறாா்.

News image
Updated On :23 மே 2026, 3:02 am IST

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சனிக்கிழமை (மே 23) புறப்படுகிறாா்.

சீனாவின் ஹாங்சோ நகரில் இருந்து பயணத்தைத் தொடங்கும் ஷாபாஸ் ஷெரீஃப், அங்கு நடைபெறும் பாகிஸ்தான்-சீனா வா்த்தக முதலீட்டு மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறாா்.

மேலும், இப்பயணத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கியாங் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு அரசியல், பொருளாதார, உத்திசாா் உறவுகள் குறித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பாகிஸ்தான்-சீனா ராஜீய உறவுகள் 1951-இல் நிறுவப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இப்பயணம் அமைகிறது.

சீனாவுடன் ராஜீய உறவை ஏற்படுத்திய முதல் முஸ்லிம் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, பாகிஸ்தான் அரசு 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடவுள்ளது.