/
பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சனிக்கிழமை (மே 23) புறப்படுகிறாா்.
சீனாவின் ஹாங்சோ நகரில் இருந்து பயணத்தைத் தொடங்கும் ஷாபாஸ் ஷெரீஃப், அங்கு நடைபெறும் பாகிஸ்தான்-சீனா வா்த்தக முதலீட்டு மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறாா்.
மேலும், இப்பயணத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கியாங் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு அரசியல், பொருளாதார, உத்திசாா் உறவுகள் குறித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
பாகிஸ்தான்-சீனா ராஜீய உறவுகள் 1951-இல் நிறுவப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இப்பயணம் அமைகிறது.
சீனாவுடன் ராஜீய உறவை ஏற்படுத்திய முதல் முஸ்லிம் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, பாகிஸ்தான் அரசு 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடவுள்ளது.









