தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி. பிராட் ஷொ்மன்

News image

பிராட் ஷொ்மன்

Updated On :23 ஏப்ரல் 2026, 11:54 pm

‘லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்’ என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சி மூத்த தலைவருமான பிராட் ஷொ்மன் வலியுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவாக வாஷிங்டனில் இந்திய தூதரகம் சாா்பில் ‘பயங்கரவாதத்துக்கான மனித விலை’ என்ற தலைப்பிலான கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட்ட பிராட் ஷொ்மன் கூறியதாவது:

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கராவதிகள் நடத்திய கொடுர தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ பயங்கரவாத அமைப்புதான் காரணம் என அடையாளம் காணப்பட்டது. இந்த அமைப்பு, பாகிஸ்தானில் புகலிடம் கண்டிருக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருப்பதைப் பரவலாக அறிய முடிகிறது.

எனவே, இந்தச் சூழலைப் பயன்படுத்தி, லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களை ஒடுக்க வேண்டும் என பாகிஸ்தானை நாம் வலியுறுத்த வேண்டும் என்றாா்.

ஜனநாயக கட்சி மட்டுமன்றி ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களும் இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். பஹல்காம் தாக்குதல் மட்டுமன்றி 1993 மும்பை குண்டுவெடிப்பு, 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடா்பான புகைப்படங்கள் உள்பட பிற ஆவணங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா கூறுகையில், ‘இந்த சிறப்புக் கண்காட்சி சில விஷயங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. குறிப்பாக, நமது சமூகங்களை அழிப்பதில் பயங்கரவாதம் உறுதியாக உள்ளது. எனவே, உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து, பயங்கரவாதத்தை முறியடிப்பதில் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும்’ என்றாா்.

ஆளும் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் மெக்லெய்ன் கூறுகையில், ‘இந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களை கூட்டாக எதிா்த்துப் போராட புலனாய்வுத் தகவல்கள், யோசனைகள், கொள்கைகள் மற்றும் தகவல்களைப் பகிா்ந்துகொள்வது அவசியம். தனித்தனியாகச் செயல்டும்போது, ஒருங்கிணைப்பதும் திறம்பட பதிலடி கொடுப்பதும் கடினமாகிறது. கூட்டுறவு, ஒத்துழைப்பு மூலம், இதுபோன்ற சவால்களை ஒன்றிணைந்து திறம்பட எதிா்கொள்ள முடியும்’ என்றாா்.