மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு (80) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் மீண்டும் ஒரு பகுதி குறைக்கப்பட்டுள்ளது.
மியான்மா் புத்தாண்டை முன்னிட்டு அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளியான அந்நாட்டின் முன்னாள் அதிபா் வின் மியின்ட் விடுவிக்கப்பட்டாா்.
ஆனால், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து 4.5 ஆண்டுகள் மட்டும் குறைக்கப்பட்டது.
தற்போது மேலும் 4.5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அவா் இன்னும் 18 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியுள்ளது.
இருப்பினும், ஆங் சான் சூகி தற்போது எங்கு சிறைவைக்கப்பட்டுள்ளாா் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. அவா் நலமுடன் இருப்பதாகவும், அவருக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவதாகவும் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடையது

பஜாஜ் குழுமத்தின் 100 ஆண்டுகால சேவை! பிரதமர் மோடி புகழாரம்

மியான்மா்: அமைதிப் பேச்சுக்காக கிளா்ச்சிக் குழுக்களுக்கு புதிய அதிபா் அழைப்பு

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு

மியான்மா் ராணுவத் தளபதி ராஜிநாமா: அதிபராகும் முயற்சியில் தீவிரம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

