மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு (80) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் மீண்டும் ஒரு பகுதி குறைக்கப்பட்டுள்ளது.
மியான்மா் புத்தாண்டை முன்னிட்டு அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளியான அந்நாட்டின் முன்னாள் அதிபா் வின் மியின்ட் விடுவிக்கப்பட்டாா்.
ஆனால், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்து 4.5 ஆண்டுகள் மட்டும் குறைக்கப்பட்டது.
தற்போது மேலும் 4.5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், அவா் இன்னும் 18 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியுள்ளது.
இருப்பினும், ஆங் சான் சூகி தற்போது எங்கு சிறைவைக்கப்பட்டுள்ளாா் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. அவா் நலமுடன் இருப்பதாகவும், அவருக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவதாகவும் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணமுறைகேடு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

வெறும் ரூ. 730 தான் சேதம்! 25 ஆண்டுகளுக்குப் பிறகு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனை!

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம்: பிரதமா் மோடியிடம் மியான்மா் அதிபா் உறுதி






