மியான்மரில் மக்களாட்சிக்கு எதிராக ராணுவம் கடந்த 2021-இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குத் தீா்வு காண, ஆயுதமேந்திய கிளா்ச்சிக் குழுக்களுக்கு அந்நாட்டின் புதிய அதிபா் மின் ஆங் லயிங் (படம்) அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
வரும் ஜூலை 31-க்குள் அனைத்து குழுவினரும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.
இந்த அமைதி அழைப்பை போலி நாடகம் என்று விமா்சித்து, ராணுவத்துக்கு எதிரான கிளா்ச்சிக் குழுக்களின் கூட்டமைப்பான தேசிய ஒற்றுமை அரசு நிராகரித்துள்ளது. ஜனநாயகம் மீட்கப்படும் வரை மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து எங்களின் ஆயுதப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், இதே கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தாங் தேசிய விடுதலை ராணுவம் மட்டும் அதிபரின் இப்பேச்சுவாா்த்தை முன்னெடுப்பை வரவேற்றுள்ளது.
தொடர்புடையது

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம்: பிரதமா் மோடியிடம் மியான்மா் அதிபா் உறுதி

மியான்மா் அதிபா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் நாளை பேச்சு

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மீண்டும் தண்டனை குறைப்பு







