மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.

News image

ஆங் சான் சூகி - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 8:54 pm

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.

மியான்மா் புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளியான அந்நாட்டின் முன்னாள் அதிபா் வின் மியின்ட் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2021-இல் ஆங் சான் சூகி (80) தலைமையிலான மக்களாட்சியை கவிழ்த்துவிட்டு, மின் ஆங் லயிங் தலைமையிலான ராணுவத்தினா் ஆட்சியைக் கைப்பற்றினா். அப்போது ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் சிறைபிடிக்கப்பட்டனா்.

ஊழல், தோ்தல் முறைகேடு எனப் பல குற்றச்சாட்டுகளின்கீழ் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டிருந்த 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் தற்போது 4.5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் நடைபெற்ற சா்ச்சைக்குரிய தோ்தலைத் தொடா்ந்து, மின்ஆங் லயிங் இம்மாதத் தொடக்கத்தில் அதிபராகப் பொறுப்பேற்றாா். இந்நிலையில், தற்போது 179 வெளிநாட்டினா் உள்பட 4,335 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.