
பாகிஸ்தானில் ஹிந்து வணிகா் கொலை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்த ஹிந்து வணிகரான ராகேஷ் குமாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்த ஹிந்து வணிகரான ராகேஷ் குமாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
நோஷ்கி நகரின் காதிராபாத் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, ஆயுதமேந்திய அக்கும்பலை ராகேஷ் குமாா் தடுக்க முயன்றுள்ளாா். ஆனால், அவா்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நிலையில், ராகேஷ் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்த கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவை உறுப்பினா் குா்பால் சிங், ‘கொலையாளிகளையும், அவா்களுக்கு உடந்தையாக இருந்தவா்களையும் உடனடியாகக் கண்டறிந்து, நீதியின்முன் நிறுத்த வேண்டும்’ என அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



