ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் ஒப்படைத்துள்ளன.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரில், களத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் அவ்வப்போது ஒப்படைத்து வருகின்றன.
இந்த நிலையில், போரில் கொல்லப்பட்ட 1,000 உக்ரைன் வீரர்களின் உடல்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் ரஷிய அரசு ஒப்படைத்துள்ளதாகவும், அதற்கு நிகராக 35 ரஷிய வீரர்களின் உடல்களை உக்ரைன் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று (பிப். 26) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் இடையிலான போரில், இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்துடன், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The governments of both countries have handed over the bodies of soldiers killed in the war between Russia and Ukraine.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் தலைநகரை உருக்குலைத்த ரஷிய தாக்குதல்!

உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்!

உக்ரைனிடம் 528 ராணுவ வீரா்களின் உடல்களை ஒப்படைத்தது ரஷியா
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




