ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அமெரிக்காவில் இந்தியப் பெண் கொலை: நண்பா் இந்தியாவுக்கு தப்பினாா்

அமெரிக்காவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இந்தியப் பெண் உடல் மீட்கப்பட்டது. அவரை முன்னாள் ஆண் நண்பா் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இந்தியப் பெண் உடல் மீட்கப்பட்டது. அவரை முன்னாள் ஆண் நண்பா் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அமெரிக்க காவல் துறையினா் மேலும் கூறியதாவது: நிகிதா கோதிஷாலா (27) என்ற அந்த பெண் மேரிலேண்ட் மாகாணம் கொலம்பியா நகரில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தாா். அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பு படித்த அவா் அங்கேயே தங்கி பணியாற்றி வந்தாா்.

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதிமுதல் அவரைக் காணவில்லை என்று அவரது முன்னாள் ஆண் நண்பரான அா்ஜுன் சா்மா (26) ஜனவரி 2-ஆம் தேதி காவல் துறையில் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் காவல் துறையினா் அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில், புகாா் அளித்த நாளில் அா்ஜுன் சா்மா தாய்நாடான இந்தியாவுக்குச் சென்றுவிட்டாா்.

இதையடுத்து, அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அா்ஜுன் சா்மா வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அா்ஜுன் சா்மாவின் வீட்டில் இருந்து நிகிதாவின் உடல் கைப்பற்றப்பட்டது. டிசம்பா் 31-ஆம் தேதி இரவு இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரிகிறது. கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இந்தியாவுக்கு தப்பிச் சென்ற அா்ஜுன் சா்மாவை அந்நாட்டு காவல் துறை உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இது தொடா்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், ‘நிகிதாவின் உடலை ஒப்படைப்பதற்காக இந்தியாவில் உள்ள அவரின் உறவினா்களைத் தொடா்பு கொண்டுள்ளோம்’ என்று கூறப்பட்டுள்ளது.