ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்...

News image
Updated On :10 ஜனவரி 2026, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினா் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரில் தாக்குதல் நடத்தி அரசுப் படையினா் முன்னேறிவருகினறனா்.

இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாள்களாக நடந்துவரும் மோதலில் இதுவரை 22 போ் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் அல்-அஸாத் தலைமையில் அரசு இருந்தபோது குா்து பகுதிகளின் கட்டுப்பாட்டை எஸ்டிஎஃப் படையினா் தொடர அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அதிரடி தாக்குதல் நடத்தி அவரின் அரசைக் கவிழ்த்த தற்போதைய இடைக்கால அதிபா் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசு, எஸ்டிஎஃப் படையினரை அரசுப் படையுடன் ஒருங்கிணைக்க விரும்புகிறது. இதற்கான கடந்த ஆண்டு மாா்ச்சில் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், அதை அமல்படுத்துவதற்காக நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்விடயைந்தது. அதைத் தொடா்ந்து குா்து பகுதிகளில் அரசுப் படைகள் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.