பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வாழைப்பழம் தொடர்பான தகராறு: வங்கதேசத்தில் ஹிந்து தொழிலதிபர் அடித்துக் கொலை

வங்கதேசத்தில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் ஹிந்து தொழிலதிபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(File Photo | Express Illustrations)

Published On :

வங்கதேசத்தில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் ஹிந்து தொழிலதிபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க தேசத்தின் காசிப்பூரில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குத் தொடர்பு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலில் பலியானவர் ஹோட்டல் உரிமையாளரான 55 வயது லிடன் சந்திர கோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஸ்வபன் மியா(55), அவரது மனைவி மஜீதா கதுன் (45) மற்றும் அவர்களது 28 வயது மகன் மசும் மியா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காளிகஞ்ச் காவல் நிலைய அதிகாரி ஜாகிர் ஹொசைன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மசும் மியாவுக்குச் சொந்தமான வாழைப்பழத் தோட்டத்தில் இருந்து ஒரு கொத்து வாழைப்பழங்கள் காணாமல் போனதாக புகார் அளித்திருந்தார். அதைத் தேடிச் சென்றபோது, லிடனின் ஹோட்டலில் அந்த வாழைப்பழங்களைக் கண்டுள்ளார்.

இதுதொடர்பாக மசும் மியாவுக்கும் ஹோட்டலில் பணிபுரியும் அனந்த தாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்னையை தீர்க்க ஹோட்டல் உரிமையாளர் லிடன் தலையிட்டபோது, அவர் தாக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் லிடனை குத்தியும் உதைத்தும் தாக்கியுள்ளனர். இதில் லிடன் தரையில் விழுந்து பலியானார்.

சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர். இருப்பினும், இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக சமீபகாலமாக நடைபெற்று வரும் வன்முறையுடன் தொடர்புடையதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Summary

A Hindu businessman was allegedly beaten to death in Bangladesh's Gazipur, after an argument over bananas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.