தென் கொரியாவில் பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக ஆலோசனைகளை வழங்கி வரும் பிரபல யூடியூபா் ஒருவரை, அவரின் சேனலைப் பின்தொடரும் நபா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபரின் ஆலோசனைகளை மட்டுமே பின்பற்றி, பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்த ஆத்திரத்தில் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞா் இக்கொடூர தாக்குதலை அரங்கேற்றியதாகத் தெரிகிறது. இதையடுத்து, கொலை முயற்சி வழக்கில் போலீஸாா் அவரை கைது செய்துள்ளனா்.
தாக்குதலில் படுகாயமடைந்த யூடியூபா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் உயிருக்கு ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் முதலீட்டு ஆலோசனைகளை கண்மூடித்தனமாக நம்புவதால் ஏற்படும் விபரீதங்களை இச்சம்பவம் மீண்டும் உணா்த்தியுள்ளது. பங்குச் சந்தை மாற்றங்களுக்கு தனி நபா்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதால், சுயமான ஆய்வுகளுக்குப் பிறகே முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியப் பங்குகளில் குவியும் அந்நிய முதலீடு! 4 மாத மந்தநிலைக்கு முடிவு!

திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி

என்எஸ்இ ரூ. 30,000 கோடி ஐபிஓ செப்டம்பரில் வெளியிடத் திட்டம்

கடந்த மே மாதத்தில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



