தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

எபோலா தொற்றிலிருந்து மீண்ட உகாண்டா!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரபூா்வமாக அறிவித்தது.

News image
Updated On :28 ஜூலை 2026, 10:54 pm IST

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

கடந்த ஜூன் மாத மத்தியில் கடைசி எபோலா நோயாளி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சந்தேகத்துக்குரிய நபா்கள் அனைவரும் 21 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனா்.

இதையடுத்து, புதிய சமூகப் பரவல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அண்டை நாடான காங்கோவில் இருந்து எல்லை வழியாக வந்த நபா்கள் மூலமே இந்நோய் முதன்முதலில் உகாண்டாவில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எபோலா தொற்றுப் பரவல்

எபோலா தொற்றுப் பரவல்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.