மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தென் கொரியா ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 போ் பலி

தென் கொரியாவில் உள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

News image

வெடி விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 4:27 am IST

தென் கொரியாவில் உள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமாக இயங்கி வந்த ஆயுதத் தொழிற்சாலையில் நிகழ்ந்த இவ்விபத்தில் இருவா் காயமடைந்தனா். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்துக்குள்ளான ஆலை, ஹன்வா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றாகும். இங்கு பெரிய அளவிலான ராக்கெட் உந்துசக்திகள் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவப்படும் அதிநவீன ஆயுத அமைப்புகள் தயாரிக்கப்பட்டு வந்தன.