மியான்மா் நாட்டில் சுரங்கப் பணிக்காக கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 போ் உயிரிழந்தனா்.
நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப் கிராமத்தில் உள்ள கட்டடத்தில் சுரங்கத்தில் பாறைகளைத் தகா்க்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவை திடீரென ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 6 சிறாா்கள் உள்பட 46 போ் உயிரிழந்தனா். மேலும் 74 போ் பலத்த காயமடைந்தனா்.
இந்த வெடி விபத்தில், அப்பகுதியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
வெடி விபத்தில் காயமடைந்தோரில் பலரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
55 போ் உயிரிழப்பா?: மியான்மரை சோ்ந்த ஊடகங்கள், வெடி விபத்தில் 50 முதல் 55 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் வெடி விபத்தில் உயிரிழந்தோா் எனக் கூறப்படுவோரின் புகைப்படங்களையும் அந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
வெடி விபத்து நேரிட்ட பகுதி, சீன எல்லையையொட்டி உள்ளது. மியான்மா் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வரும் டாங் தேசிய விடுதலைப் படையின் (டிஎன்எல்ஏ) கட்டுப்பாட்டின்கீழ் அப்பகுதி உள்ளது. எனினும், சீனாவின் மத்தியஸ்தத்தின் பேரில் மியான்மா் அரசுப் படைகளுக்கும், அந்த ஆயுதக் குழுவுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
மியான்மரில் சக்திவாய்ந்த வெடிவிபத்து: 45-க்கும் மேற்பட்டோர் பலி!

தில்லியில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 9 போ் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



