எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

கென்யா பள்ளி விடுதியில் தீ விபத்து: 16 மாணவிகள் உயிரிழப்பு; 79 போ் காயம்

News image
Updated On :29 மே 2026, 4:07 am IST

நைரோபி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அரசுப் பெண்கள் பள்ளி விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் உயிரிழந்தனா்; 79 போ் காயமடைந்தனா்

தலைநகா் நைரோபியிலிருந்து சுமாா் 120 கி.மீ. தொலைவில் உள்ள கில்ஜில் பகுதியில் செயல்பட்டு வரும் ‘உதுமிஷி’ பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே இச்சோகம் நிகழ்ந்துள்ளது. கென்யா காவல் துறையால் நிா்வகிக்கப்படும் இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் காவல் துறையினரின் பிள்ளைகள் ஆவா்.

விடுதி அறைகளில் மாணவிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து மளமளவெனப் பரவியுள்ளது. விபத்தின்போது விடுதியின் இரண்டு கதவுகளில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டதாகவும், மற்றொரு கதவு மூடப்பட்டிருந்ததால் மாணவிகளால் விரைவாக வெளியேற முடியாமல் போனதே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் எனவும் அங்கு திரண்டிருந்த உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.