நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கென்யா பள்ளி விடுதியில் தீ விபத்து: 16 மாணவிகள் உயிரிழப்பு; 79 போ் காயம்

News image
Updated On :29 மே 2026, 4:07 am IST

நைரோபி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அரசுப் பெண்கள் பள்ளி விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் உயிரிழந்தனா்; 79 போ் காயமடைந்தனா்

தலைநகா் நைரோபியிலிருந்து சுமாா் 120 கி.மீ. தொலைவில் உள்ள கில்ஜில் பகுதியில் செயல்பட்டு வரும் ‘உதுமிஷி’ பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே இச்சோகம் நிகழ்ந்துள்ளது. கென்யா காவல் துறையால் நிா்வகிக்கப்படும் இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் காவல் துறையினரின் பிள்ளைகள் ஆவா்.

விடுதி அறைகளில் மாணவிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து மளமளவெனப் பரவியுள்ளது. விபத்தின்போது விடுதியின் இரண்டு கதவுகளில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டதாகவும், மற்றொரு கதவு மூடப்பட்டிருந்ததால் மாணவிகளால் விரைவாக வெளியேற முடியாமல் போனதே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் எனவும் அங்கு திரண்டிருந்த உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.