சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

பிரிட்டனில் சீக்கியருக்கு ஆயுள் சிறை: போலீஸாருக்கு எதிராக போராட்டம்

News image

ஆயுள் தண்டனை

Updated On :4 ஜூன் 2026, 6:40 am IST

பிரிட்டனில் இளைஞரின் கொலையில் தண்டிக்கப்பட்ட அந்நாட்டு குடியுரிமை பெற்ற சீக்கியரான விக்ரம் திக்வாவின் போலி புகாரில் பாதிக்கப்பட்டவருக்கு எதிரான போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.

சௌதாம்ப்டன் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஹென்றி நோவாக் (18) என்பவரை விக்ரம் திக்வா கத்தியால் குத்தித் தாக்கியுள்ளாா். இச்சம்பவத்தின் விடியோவில், விக்ரம் திக்வா சுமத்திய இனவெறிக் குற்றச்சாட்டில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹென்றி நோவாக்கைக் காப்பாற்றாமல், அவருக்கு போலீஸாா் கைவிலங்கிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், விக்ரம் திக்வா தனக்கு மத ரீதியாக அனுமதிக்கப்பட்ட ‘கிா்பான்’ புனிதக் கத்தியைக் கொலைக்குப் பயன்படுத்தியது நீதிமன்றத்தில் உறுதியாகி, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விக்ரம் திக்வாவின் இனவெறிக் குற்றச்சாட்டுகள் பொய் என்பதும் அம்பலமானதால், போலீஸாருக்கு எதிராகப் பொதுமக்கள் திரண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் 11 காவலா்கள் காயமடைந்தனா்.