மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கியூபா அதிபா், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

கியூபாவின் அதிபா் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2026, 3:09 am IST

கியூபாவின் அதிபா் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

கியூபாவின் கம்யூனிஸ்ட் தலைவா்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

இத்தடைகளின்கீழ், அதிபா் மிகெல் டீயாஸ் கானெலின் மனைவி லிஸ் குவெஸ்டா பெராசா, முன்னாள் அதிபா் ரௌல் காஸ்ட்ரோவின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 5 போ் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உள்பட 5 முக்கிய அமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்நடவடிக்கையை கியூபா வெளியுறவு அமைச்சா் புருனோ ரோட்ரிகஸ் கடுமையாக விமா்சித்தாா்.இது அமெரிக்காவின் தலையீட்டுக் கொள்கைக்குச் சான்றாகும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கும் இத்தகைய முயற்சிகள் தோல்வியில் முடிவடையும் என்றும் அவா் சமூக ஊடகத்தில் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் தடையால், தற்போது கியூபா கடும் மின்சாரத் தட்டுப்பாட்டிலும், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் வெனிசுலா விவகாரத்தைப் போல, கியூப தலைவா்களை முடக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் 11 கியூப அதிகாரிகள் மீது தடைகள் விதிக்கப்பட்டன.

மிகெல் டீயாஸ் கானெல்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.