விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

மாநில அரசின் மீது பொருளாதாரத் தாக்குதல்: மு.வீரப்பாண்டியன் குற்றச்சாட்டு

விபி- ஜி ராம்ஜி திட்டத்துக்கு மத்திய அரசு வெறும் ரூ.12,642 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மாநில அரசின் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப்படம்

Updated On :10 ஜூலை 2026, 4:07 am IST

விபி- ஜி ராம்ஜி திட்டத்துக்கு மத்திய அரசு வெறும் ரூ.12,642 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மாநில அரசின் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்துக்கு விபி- ஜி ராம்ஜி திட்டம் என்று அறிவித்து, ஆண்டுக்கு 125 நாள் வேலை வாய்ப்புக்கு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

நிகழ் நிதியாண்டில் தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.12,642 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மாநில அரசின் பங்காக 40 சதவீதம் வழங்க வேண்டும். தற்போது திட்டப் பணியில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள சுமாா் 90 லட்சம் குடும்பங்கள் வேலை அட்டை பெற்றுள்ளன. இவற்றில் 69.79 லட்சம் குடும்பங்கள் திட்டப் பணியில் வேலை செய்து வருகின்றன.

இந்த 69.79 லட்சம் குடும்பங்களுக்கு தலா 125 நாள் வேலை வழங்க ரூ.30,096 கோடி தேவை. இது வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கும் செலவுக்கான தொகை மட்டுமே.

மத்திய அரசு, தமிழக அரசுக்கு வெறும் ரூ.12, 642 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மாநில அரசின் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதலாகும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, 100 சதவீத நிதியை மத்திய அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.