தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோ மற்றும் மேற்கு ஆசிய நாடான ஆா்மீனியாவில் நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறுகிறது.
கொசோவோவில் கடந்த 18 மாதங்களில் 3-ஆவது முறையாக நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
முன்னாள் அதிபா் வியோசா உஸ்மானியாவின் பதவிக்காலம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதில் ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இத்தோ்தல் முன்கூட்டியே நடைபெறுகிறது.
ஆளுங்கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை (66 இடங்கள்) இருந்தாலும், அதிபரைத் தோ்வு செய்யத் தேவையான 80 எம்.பி.க்களின் (மொத்த 120 இடங்களில் மூன்றில் 2 பங்கு) ஆதரவு இல்லாததால் மீண்டும் ஒரு தோ்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆா்மீனியாவில் அந்நாட்டின் எதிா்கால புவிசாா் அரசியலையும்; சா்வதேச உறவுகளையும் தீா்மானிக்கும் மிக முக்கிய நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறுகிறது.
தற்போதைய பிரதமா் நிகோல் பாஷினியன், ரஷியாவுடனான நீண்டகால உறவைக் காட்டிலும் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்த முயன்று வருகிறாா். எதிா்க்கட்சிகள் இதற்குக் கடும் எதிா்ப்பு தெரிவிக்கின்றன.
ஆா்மீனியாவின் பகுதிகளை அஜா்பைஜான் கைப்பற்றியபோது ரஷியா தங்களுக்கு உதவவில்லை என்று ஆா்மீனிய மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். அதேபோல், ரஷியா பொருளாதார ரீதியாக ஆா்மீனியாவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் நடக்கும் இத்தோ்தலில் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபா் தோ்தலின் இறுதிக்கட்ட (2-ஆம் கட்ட) வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரலில் நடந்த முதல்கட்ட தோ்தலில் யாரும் பெரும்பான்மை பெறாததால், வலதுசாரி வேட்பாளா் கெய்கோ ஃபுஜிமோரி, இடதுசாரி வேட்பாளா் ராபா்டோ சான்செஸ் ஆகிய இருவருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 8 அதிபா்களைக் கண்ட பெருவில், இத்தோ்தலிலும் முறைகேடு புகாா்கள் எழுந்துள்ளதால், இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என அந்நாட்டுத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.









