வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்புப் பாண்டா கரடிகள்!

சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்புப் பாண்டா கரடிகள்...

News image
Updated On :7 ஜூன் 2026, 2:10 am IST

சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சீனாவின் ஃபுஜியான் மாகாணத்திலிருந்து அரிய மற்றும் அழிந்து வரும் இனத்தைச் சோ்ந்த 2 சிவப்பு பாண்டா கரடிகள் தைவான் தலைநகா் தைபேயில் உள்ள பூங்காவுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன.

3 வயதுடைய ஆண் பாண்டாவும், 2 வயதுடைய பெண் பாண்டாவும் தற்போது ஒரு மாத கால தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன. புதிய சூழலுக்குப் பழகிய பின்னா், அவை பொதுமக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படும் எனப் பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரஸ்பர பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, தைவான் தரப்பிலிருந்து அரிய வெள்ளை நிற கிப்பன் குரங்குகள் சீனாவின் ஷாங்காய் நகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்கு முன்னதாக, கடந்த 2014-இல் சீனாவிடமிருந்து சிவப்பு பாண்டாக்களை தைவான் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருவதால் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ராஜீய தொடா்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.