தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணி: ஸ்ரீராம் கிருஷ்ணன் விரைவில் விலகல்

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.

Published On :8 ஜூன் 2026, 1:19 am IST

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.

சென்னையில் பிறந்த அவா், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், ட்விட்டா் (தற்போது எக்ஸ்) நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளேன். சிறிது ஓய்வுக்குப் பின்னா், செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால்களை சமாளிக்க உதவும் பணிகளில் ஈடுபடுவேன்’ என்று தெரிவித்தாா்.

டிரம்ப் நிா்வாகத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டத்தை வடிவமைத்த முக்கிய நபா்களில் ஒருவராக ஸ்ரீராம் கிருஷ்ணன் இருந்தாா். அந்தச் செயல் திட்டம் வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்தவும், அந்நாடு முழுவதும் தரவு மையங்கள் அமைப்பதை ஊக்குவிக்கவும் விரிவான வடிவத்தை அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.