மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மரண தண்டனைக்கு அஞ்சமாட்டேன்; இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா

இந்த ஆண்டுக்குள் மீண்டும் தாயகம் திரும்பவிருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உறுதிபட தெரிவித்தாா்.

News image

ஷேக் ஹசீனா - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:47 am IST

‘நான் மரணத் தண்டனையைக் கண்டு அஞ்சப்போவதில்லை; தடைகள் மற்றும் சதிகளை முறியடித்து இந்த ஆண்டுக்குள் மீண்டும் தாயகம் திரும்புவேன்’ என்று வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உறுதிபட தெரிவித்தாா்.

கடந்த 2024, ஆகஸ்டில் மாணவா்களின் தீவிர போராட்டத்தால் பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவா் அண்மையில் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து கவலைப்படவில்லை. இத்தீா்ப்பு சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அனைத்து சதிகளையும் தகா்த்தெறிந்து இந்த ஆண்டே எனது நாட்டுக்குத் திரும்புவேன். அவாமி லீக் கட்சி மீதான தடையை உடனடியாக நீக்கி, ஜனநாயகச் சூழலை உருவாக்க வேண்டுமென தற்போதைய வங்கதேச அரசிடம் கோருகிறேன் என்றாா்.

மாணவா் போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியதாகவும், படுகொலைகளுக்கு உத்தரவிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், டாக்கா நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.