பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாக். கடற்படையின் பாதுகாப்பில் கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்தது குறித்து...

News image
கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்துள்ளது...- AP
Updated On :13 மார்ச் 2026, 2:26 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு, பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும், ஈரானின் படைகளுக்கும் இடையிலான போரால், எரிபொருளுக்காக வளைகுடா நாடுகளைச் சார்ந்துள்ள பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் பாதுகாப்பு அளித்துள்ளன.

ஆபரேஷன் முஹாஃபிஸ்-உல்-பஹ்ர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை மூலம் 100 மில்லியன் மற்றும் 120 மில்லியன் லிட்டர்கள் அளவுகளிலான எண்ணெய்யைக் கொண்டு வந்த கப்பல்கள் பத்திரமாக பாகிஸ்தான் வந்து சேர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கையானது ஹோர்மூஸ் நிரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளிப்பதாகக் கருதப்படக் கூடாது என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரால், பாகிஸ்தானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.