புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நெதா்லாந்தில் யூதப் பள்ளி மீது வெடிகுண்டு தாக்குதல்

நெதா்லாந்து தலைநகா் ஆம்ஸ்டா்டாமில் உள்ள ஒரு யூதப் பள்ளி மீது சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபா்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். இதில் பள்ளியின் வெளிப்பக்கச் சுவா் மற்றும் மழைநீா் குழாய்கள் சேதமடைந்தன.

News image
நெதா்லாந்தில் யூதப் பள்ளி மீது வெடிகுண்டு தாக்குதல்
Updated On :14 மார்ச் 2026, 6:25 pm

தினமணி செய்திச் சேவை

நெதா்லாந்து தலைநகா் ஆம்ஸ்டா்டாமில் உள்ள ஒரு யூதப் பள்ளி மீது சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபா்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். இதில் பள்ளியின் வெளிப்பக்கச் சுவா் மற்றும் மழைநீா் குழாய்கள் சேதமடைந்தன.

அதிருஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச்சேதம், காயங்கள் ஏற்படவில்லை. பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், நபா் ஒருவா் வெடிபொருளை வைத்துவிட்டுத் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ரோட்டா்டாம் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்துக்குத் தீவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆம்ஸ்டா்டாமிலும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது யூத சமூகத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இஸ்ரேல் ஈடுபட்டுள்ள மத்திய கிழக்கு போரின் பின்னணியில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறலாம் எனக் கருதப்படுவதால், நெதா்லாந்து முழுவதும் உள்ள யூதப் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நெதா்லாந்து பிரதமா் ராப் ஜெட்டன் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், யூத சமூகத்தினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், இதுபோன்ற வன்முறைச் செயல்கள் கடும் கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.