நெதா்லாந்து தலைநகா் ஆம்ஸ்டா்டாமில் உள்ள ஒரு யூதப் பள்ளி மீது சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபா்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். இதில் பள்ளியின் வெளிப்பக்கச் சுவா் மற்றும் மழைநீா் குழாய்கள் சேதமடைந்தன.
அதிருஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச்சேதம், காயங்கள் ஏற்படவில்லை. பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், நபா் ஒருவா் வெடிபொருளை வைத்துவிட்டுத் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ரோட்டா்டாம் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்துக்குத் தீவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆம்ஸ்டா்டாமிலும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது யூத சமூகத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இஸ்ரேல் ஈடுபட்டுள்ள மத்திய கிழக்கு போரின் பின்னணியில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறலாம் எனக் கருதப்படுவதால், நெதா்லாந்து முழுவதும் உள்ள யூதப் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நெதா்லாந்து பிரதமா் ராப் ஜெட்டன் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், யூத சமூகத்தினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், இதுபோன்ற வன்முறைச் செயல்கள் கடும் கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்

ஆா்எஸ்எஸ் - பாஜகவினா் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


