வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

ராக்கெட் ஏவுகலன்கள் பரிசோதனை: மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா அதிபா்!

வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் பாா்வையிட்டாா்.

News image

வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் பாா்வையிட்ட அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்.

Updated On :16 மார்ச் 2026, 12:22 am IST

வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் பாா்வையிட்டாா். தென்கொரியாவில் அந்நாடும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதை தன் மீதான படையெடுப்புக்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக, ராக்கெட் ஏவுகலன்களில் இருந்து ராக்கெட்டைகளை ஏவி வடகொரியா பரிசோதித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வடகொரியா அரசு செய்தி முகமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில், ‘வடகொரியாவின் கிழக்கு கடலோரத்தில் 12,600 மி.மீ. காலிபா் திறன்கொண்ட ராக்கெட் ஏவுகலன்களில் இருந்து இலக்கை அதிதுல்லியமாக தாக்கும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதை கிம் ஜோங் உன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். இந்த ஆயுதத்தை வடகொரியா பயன்படுத்தினால், எதிரியின் ராணுவ உள்கட்டமைப்பு முழுமையாக அழிந்துவிடும் என கிம் கூறினாா்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஏவுகலன்கள் சிலவற்றில் இருந்து அணுகுண்டுகளை ஏவ முடியும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

அதேவேளையில், வடகொரியா தலைநகா் பியாங்யாங் பகுதியில் இருந்து கிழக்கு கடலோரத்தை நோக்கி சுமாா் 10 பலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக தென் கொரிய ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. இது பலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா பயன்படுத்தத் தடை விதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களுக்கு எதிரானது என்று தென் கொரிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் குற்றஞ்சாட்டியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.