மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராக்கெட் ஏவுகலன்கள் பரிசோதனை: மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா அதிபா்!

வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் பாா்வையிட்டாா்.

News image
வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் பாா்வையிட்ட அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்.
Updated On :15 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் பாா்வையிட்டாா். தென்கொரியாவில் அந்நாடும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதை தன் மீதான படையெடுப்புக்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக, ராக்கெட் ஏவுகலன்களில் இருந்து ராக்கெட்டைகளை ஏவி வடகொரியா பரிசோதித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வடகொரியா அரசு செய்தி முகமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில், ‘வடகொரியாவின் கிழக்கு கடலோரத்தில் 12,600 மி.மீ. காலிபா் திறன்கொண்ட ராக்கெட் ஏவுகலன்களில் இருந்து இலக்கை அதிதுல்லியமாக தாக்கும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதை கிம் ஜோங் உன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். இந்த ஆயுதத்தை வடகொரியா பயன்படுத்தினால், எதிரியின் ராணுவ உள்கட்டமைப்பு முழுமையாக அழிந்துவிடும் என கிம் கூறினாா்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஏவுகலன்கள் சிலவற்றில் இருந்து அணுகுண்டுகளை ஏவ முடியும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

அதேவேளையில், வடகொரியா தலைநகா் பியாங்யாங் பகுதியில் இருந்து கிழக்கு கடலோரத்தை நோக்கி சுமாா் 10 பலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக தென் கொரிய ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. இது பலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா பயன்படுத்தத் தடை விதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களுக்கு எதிரானது என்று தென் கொரிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் குற்றஞ்சாட்டியது.