தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சமூக ஆா்வலா் மீது ஆசிட் வீச்சு: இந்தோனேசிய ராணுவத்தினா் கைது

News image
Updated On :18 மார்ச் 2026, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசிய ஆட்சி நிா்வாகத்தில் ராணுவத்தின் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆா்வலா் அண்ட்ரி யூனுஸ் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதாக 4 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா்.

அண்ட்ரி யூனுஸ் மீது கடந்த 12-ஆம் தேதி ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கடற்படை, விமானப் படையைச் சோ்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது கைதாகியுள்ள இவா்களிடம், இத்தாக்குதல் மேலதிகாரிகளின் உத்தரவில் நடத்தப்பட்டதா அல்லது தனிப்பட்ட காரணங்களால் நடந்ததா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவா்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.