அமெரிக்கா: இனிமேல் டாலர் கரன்சியில் டிரம்ப் கையெழுத்து!
அமெரிக்க நாட்டின் கரன்சியில் அதிபர் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவிருப்பதாகத் தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
கோப்புப் படம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
கோப்புப் படம்
அமெரிக்க நாட்டின் கரன்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 1861-ல்தான் டாலர் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரையில், டாலர் கரன்சியில் அந்நாட்டு கருவூலச் செயலாளர் மற்றும் கருவூலப் பொருளாளரின் கையெழுத்து மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
இந்த நிலையில், அமெரிக்கா சுதந்திரமடைந்து 250 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும்விதமாக, இனி வரும் அமெரிக்க டாலர் கரன்சியில் அதிபர் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 100 டாலர் கரன்சியில் மட்டும் டிரம்ப் கையெழுத்து இடம்பெறும் நிலையில், தொடர்ந்து படிப்படியாக மற்ற கரன்சிகளிலும் டிரம்ப் கையெழுத்து இடம்பெறுகிறது. சமீபத்தில், டிரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...