உலகளாவிய நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 10 சதவிகித வரியை சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் வருவாயை அதிகரிப்பதற்காகவும், வர்த்தகப் பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுப்பதற்காகவும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், உலக நாடுகள் மீதான டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிப்ரவரியில் ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10 சதவிகித வரியை டிரம்ப் அறிவித்தார். ஆனால், மீண்டும் உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரிவிதிப்பை சட்டவிரோதமானவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
US trade court rules against President Donald Trump's global 10% tariff
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி நல்ல நண்பர்: இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள டிரம்ப் விருப்பம்

இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரை

நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!






