ஈரானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடுகள் மீது 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுடனான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அதிகாலையில் அறிவித்தார். இந்த நிலையில், ஈரானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் உடனடியாக வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் விற்கப்படும் அவர்களின் அனைத்து பொருள்கள் மீதும் உடனடியாக 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே சுமார் 6 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால், 48 மணிநேரத்துக்குள் ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமும் அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்குமிடையே இரண்டு வாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை அதிகாலையில் அறிவித்தார்.
Summary
US President Donald Trump warns that a 50% tariff will be imposed on countries supplying weapons to Iran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்: டிரம்ப் திடீர் அறிவிப்பு

போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! - டிரம்ப்

“தாக்குதலை அதிகரித்தால்”..: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
வீடியோக்கள்

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

