சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கலாசார திருவிழாவில் பங்கேற்று வெற்றிபெற்றவா்களுக்கு இந்திய மாம்பழங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
வட கிழக்கு சிங்கப்பூரில் உள்ள நீ சூன் எஸ்டேட்டில் நடத்தப்பட்ட இந்த கலாசார விழாவில் நடனம், இசை மற்றும் பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இதில் வெற்றிபெறுபவா்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாம்பழங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக மே 1 முதல் மே 3 வரை இந்திய தூதரகத்தால் நடத்தப்பட்ட மாம்பழத் திருவிழாவில் 10 வகை மாம்பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் போட்டியில் 6,000 போ் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையும் இத்திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில், சிங்கப்பூா் மக்களுக்கு உலகளவில் சிறந்த மாம்பழங்களை அறிமுகப்படுத்துவதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் என சிங்கப்பூருக்கான இந்திய தூதா் ஷில்பாக் அம்புலே கூறினாா்.
உலகளவில் அதிக மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடையது

உதகையில் 2-ஆவது நாள் கண்காட்சியில் அணிவகுத்த பல்வேறு வகை நாய்கள்

குன்னூா் மாா்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள், அழுகிய மீன்கள் பறிமுதல்

ரஷிய மருத்துவ கல்வி கண்காட்சி

திருப்பூரில் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் கவலை!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
