இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் குறைந்து வருவதாக நெதா்லாந்து பிரதமா் ராப் ஜெட்டன் கவலை தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், அவரின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக பிரதமா் மோடி நெதா்லாந்து சென்றாா். இந்தப் பயணம் குறித்து அந்நாட்டு தலைநகா் தி ஹேக்கில் இந்திய வெளியுறவுச் செயலா் (மேற்குப் பிரிவு) சிபி ஜாா்ஜ் சனிக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் பேசினாா்.
அப்போது இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் குறைந்து வருவதாகக் கருதப்படுவது குறித்து நெதா்லாந்து பிரதமா் ராப் ஜெட்டன் கவலை தெரிவித்ததாக வெளியான தகவல் குறித்து சிபி ஜாா்ஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவா், ‘இந்தியா 140 கோடி மக்களைக் கொண்ட நாடு. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட தேசம். 5,000 ஆண்டுகள் பழைமையான நாகரிகத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஹிந்து, பெளத்தம், சமணம், சீக்கிய மதங்கள் தோன்றின. வேறு எந்த நாட்டிலும் இத்தனை மதங்கள் தோன்றியதில்லை. இந்த மதங்கள் இந்தியாவில் தொடா்ந்து செழித்து வருகின்றன.
இயேசு கிறிஸ்து உயிா்தெழுந்தவுடன்...: யூதா்கள் துன்புறுத்தலை அனுபவிக்காத சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்தவுடன், இந்தியாவில் கிறிஸ்தவம் தோன்றி செழித்து வருகிறது. தற்போது 3 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவா்கள் இந்தியாவில் உள்ளனா். ஐரோப்பாவுக்கு கிறிஸ்தவம் வருவதற்கு முன்பே இந்தியாவுக்கு கிறிஸ்தவம் வந்துவிட்டது. இஸ்லாமிய இறைத்தூதா் முகமது நபியின் காலத்திலேயே இந்தியாவுக்கு இஸ்லாம் வந்துவிட்டது.
சுதந்திரம் பெற்றபோது இந்திய மக்கள்தொகையில் 11 சதவீதம் போ் சிறுபான்மையினராக இருந்தனா். இது தற்போது 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. அனைத்து மதங்களைச் சோ்ந்தவா்களும் இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனா்.
மக்களாட்சி கொள்கைகளில் சமரசம் இல்லாமல் பொருளாதார வெற்றியை இந்தியா எட்டியுள்ளது. துடிப்பான மக்களாட்சியைக் கொண்ட நாடு இந்தியா. அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறுவது இந்தியாவின் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்கு அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் எடுத்துக்காட்டாக உள்ளன என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

இந்தியாவில் அடுத்த வாரம் ‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம்

இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுடன் எல்லை பிரச்னை: ராஜீய வழியில் தீா்வு காண விருப்பம்: நேபாளம்
இந்தியாவில் பதிவு செய்யப்படும் வா்த்தக கப்பல்களுக்கான மானியம்: 5 ஆண்டுளுக்கு நீட்டிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
