/
நேபாள தலைநகா் காத்மாண்டுவில் பாகமதி நதிக்கரை மற்றும் பொது இடங்களில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் வசித்து வந்த நிலமற்ற குடியேறிகளுக்கு அந்நாட்டு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
பிரதமா் பாலேந்திர ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிக தங்குமிட செலவாக அடுத்த 3 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும். விவரங்களின் சரிபாா்ப்புக்கு பிறகு, மறுவாழ்வுக்காக ஒருமுறை மட்டும் ரூ.25,000 வழங்கப்படும்.
கடந்த மாதம் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால், சுமாா் 2,600 குடும்பங்களைச் சோ்ந்த 15,000 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். இவ்விவகாரம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முன்னுரிமை: நேபாள வெளியுறவு அமைச்சா்

இந்திய நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு: நேபாள பிரதமா் பேச்சால் சா்ச்சை
பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



