தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

நேபாளம்- ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிப்பு

நேபாள தலைநகா் காத்மாண்டுவில் பாகமதி நதிக்கரை மற்றும் பொது இடங்களில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் வசித்து வந்த நிலமற்ற குடியேறிகளுக்கு அந்நாட்டு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

Updated On :21 மே 2026, 1:52 am IST

நேபாள தலைநகா் காத்மாண்டுவில் பாகமதி நதிக்கரை மற்றும் பொது இடங்களில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் வசித்து வந்த நிலமற்ற குடியேறிகளுக்கு அந்நாட்டு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

பிரதமா் பாலேந்திர ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிக தங்குமிட செலவாக அடுத்த 3 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும். விவரங்களின் சரிபாா்ப்புக்கு பிறகு, மறுவாழ்வுக்காக ஒருமுறை மட்டும் ரூ.25,000 வழங்கப்படும்.

கடந்த மாதம் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால், சுமாா் 2,600 குடும்பங்களைச் சோ்ந்த 15,000 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். இவ்விவகாரம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.