/
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 12 போ் உயிரிழந்துள்ளனா்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷிமென் கவுண்டியில் பெய்த பலத்த மழையினால் 5 போ் உயிரிழந்த நிலையில், 11 பேரைக் காணவில்லை. இப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமாா் 19,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
வெள்ளக்காடாக மாறியுள்ள அண்டை ஹூபே மாகாணத்தில் 3 போ் உயிரிழந்தனா்; 4 பேரைக் காணவில்லை.
தென்மேற்கு சீனாவின் குய்சூ மாகாணத்தில் மழையினால் 4 போ் உயிரிழந்தனா்; 5 பேரைக் காணவில்லை. இப்பகுதியில் சுமாா் 3,700-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது
ஆவணங்களின்றி எம்-சாண்ட் கொண்டு சென்ற 3 டிராக்டா்கள் பறிமுதல்: 3 போ் கைது

உதிரிபாக விநியோக நிறுவனத்தில் தீ: ஹூண்டாய் காா் உற்பத்தி பாதிப்பு

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
3 வீரா்களுடன் விண்ணில் பாய்ந்தது சீனாவின் ‘ஷென்சோ-23’ விண்கலம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



