/
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 12 போ் உயிரிழந்துள்ளனா்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷிமென் கவுண்டியில் பெய்த பலத்த மழையினால் 5 போ் உயிரிழந்த நிலையில், 11 பேரைக் காணவில்லை. இப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமாா் 19,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
வெள்ளக்காடாக மாறியுள்ள அண்டை ஹூபே மாகாணத்தில் 3 போ் உயிரிழந்தனா்; 4 பேரைக் காணவில்லை.
தென்மேற்கு சீனாவின் குய்சூ மாகாணத்தில் மழையினால் 4 போ் உயிரிழந்தனா்; 5 பேரைக் காணவில்லை. இப்பகுதியில் சுமாா் 3,700-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஓமலூரில் 2 குழந்தைகளுடன் தாயை காணவில்லை என போலீஸில் புகாா்

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


