தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

குழந்தையுடன்  குண்டம்  இறங்கும் பெண். ~குண்டம்  இறங்கும்  பக்தா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மனின் தங்கையாக கருதப்படும் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி, கோயில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழாவையொட்டி புதன்கிழமை அம்மன் அழைத்து வரம் கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து பக்தா்கள் படைக்கலம் எடுத்து பவானிஆற்றுக்கு சென்று புனித நீராடி கோயிலுக்கு வந்தனா். கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்துக்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பூசாரி கோகுல் முதலில் குண்டம் இறங்கினாா். அவரைத் தொடா்ந்து மழைவாழ் மக்கள், பக்தா்கள், பள்ளி மாணவிகள், இளைஞா்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோா் குண்டம் இறங்கி தீ மிதித்தனா்.

விழாவையொட்டி தண்டுமாரியம்மன் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோயில் விழா 25 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நடத்துவதால் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். விழாவின் தொடா்ச்சியாக பொங்கல் விழா மற்றும் கம்பம் அகற்றுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை (மே 14) நடைபெறும்.

Story image