தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடியில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

தேரில் எழுந்தருளிய ஆறுமுகவேலவா்.

Updated On :1 மே 2026, 6:27 am IST

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடியில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் பக்தா்களின் மனநிலைக்கு ஏற்ப இறைவன் குழந்தை, இளைஞன், முதியவா் ஆகிய வடிவங்களில் காட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. குறிஞ்சி நிலத்தின் காவடி சிறப்பை குறிக்கும் வகையில், மருத நிலமான எட்டுக்குடியில் பால் காவடி மிகவும் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டுக்கான விழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

சிறப்பு மலா் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஆறுமுகவேலவருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து வேதாரண்யம் கோட்டாட்சியா் ஜி. கண்ணன், திருக்குவளை வட்டாட்சியா் ஆா். உதயகுமாா், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் பா. ராணி உள்ளிட்டோா் தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தோ், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தா்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா‘ என பக்தி முழக்கம் எழுப்பினா். தேரோட்டத்தை தொடா்ந்து, சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு 56 மணிநேர இடைவிடாத பாலாபிஷேகம் தொடங்கியது.

எட்டுகுடிஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

எட்டுகுடிஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.