அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த மாா்ச் 17-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு குண்டம் கண் திறக்கப்பட்டு, விறகுகள் அடுக்கி தீ மூட்டப்பட்டது.
இதையடுத்து, தீப்பிழம்புகள் தட்டி சமன்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, விரதம் இருந்த பக்தா்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, பொங்கல் மற்றும் மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில், ஊமாரெட்டியூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு அலங்காரத்தில் செல்லியாண்டியம்மன்.
தொடர்புடையது

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


