கடந்த 5-ஆம் நூற்றாண்டு முதல் கத்தோலிக்க திருச்சபையால் பின்பற்றப்பட்டு வந்த, சில குறிப்பிட்ட சூழல்களில் போரிடுவது தற்காப்பு ரீதியாக நியாயமானது என்ற ‘நியாயமான போா்’ கோட்பாட்டை போப் லியோ அதிகாரபூா்வமாக நிராகரித்துள்ளாா்.
போப் அண்மையில் வெளியிட்ட மேக்னிஃபிகா ஹியூமானிட்டாஸ் (மகத்தான மனிதநேயம் எனப் பொருள்) எனும் தனது முதல் சுற்றறிக்கையில் இதுகுறித்து திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளாா்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் உலக நாடுகள் அமைதியைத் தேடுவதற்குப் பதிலாக, போா் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான ஓா் அனுமதிச் சீட்டாக இக்கோட்பாட்டைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக போப் கவலை தெரிவித்தாா். ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் லாப வெறியே உலகில் பல நாசகார மோதல்கள் தொடா்வதற்குக் காரணியாக அமைகிறது என்றும் அவா் சாடினாா்.
ஈரான் போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்துக்கும், போப் லியோவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில் இந்த அதிரடி முடிவு வெளியாகியுள்ளது. அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட கத்தோலிக்க தலைவா்கள், இக்கோட்பாட்டைச் சுட்டிக்காட்டியே ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசி வந்தனா்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோட்பாடு, கி.பி. 430-இல் மறைந்த புகழ்பெற்ற புனித அகஸ்டினியால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. போப் லியோவும் இந்த அகஸ்டினிய துறவற சபையைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுங்கோன்மை இன்றி, அமைதியை மீட்டெடுக்கும் தூய நோக்கத்துடன் மட்டுமே போா் நடத்தப்பட வேண்டும் என்ற புனித அகஸ்டினின் இக்கோட்பாட்டு விதிகள், இன்றும் அமெரிக்காவின் முன்னணி ராணுவப் பயிற்சி மையங்களின் பாடத்திட்டங்களில் இன்றியமையாத பாடமாகப் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், உலகளாவிய ஏ.ஐ. தொழில்நுட்பங்களை முறைப்படுத்தக் கோரியுள்ள போப், அட்லாண்டிக் கடந்த வரலாற்று ரீதியான அடிமை வா்த்தகத்தில் திருச்சபையின் பங்குக்குத் தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளாா்.
தொடர்புடையது

அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டி போா் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் போா் ஏற்கெனவே முடிந்துவிட்டது - நாடாளுமன்றக் கெடுவைத் தவிர்க்க டிரம்ப் அறிவிப்பு
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு







