எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

ஈரானியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கமாட்டோம் என ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா தெரிவித்துள்ளார்.

News image

ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா

Updated On :31 மே 2026, 6:46 pm IST

ஈரானியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கமாட்டோம் என ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா தெரிவித்துள்ளார்.

ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் தொடர்பான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஈரான் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவது உறுதியாகும் வரை, அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தத்திற்கும் நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஈரான் வெளியுறவுத் துறை அதிகாரிகள் எதிரியின் வார்த்தைகள் அல்லது வாக்குறுதிகளை நம்புவதில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர்நிறுத்த முன்மொழிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான நிபந்தனைகள் கொண்ட முன்மொழிவை ஈரானிடம் அளித்ததாக நேற்று (மே 29) அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. அதில் என்ன அடங்கியிருந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்காவுடனான அனைத்து ஒப்பந்தங்களிலும் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதையும், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிப்பதையும் முக்கிய உரிமையாக உறுதிசெய்ய ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் ஏற்படும் தாமதம் என்பது ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான காலத்தை மேலும் தாமதமாக்கும் என்றும், இதனால் உலகம் முழுக்க பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஈரான் அணுஆயுதக் கொள்கைகளை தளர்த்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதுமே டொனால்ட் டிரம்ப் வைக்கும் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. ஆனால், டிரம்ப்பின் கோரிக்கைகள் மீது ஈரான் முன்பே சந்தேகம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி திட்டம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன்பு 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை அமெரிக்கா விடுவிக்கவேண்டும் என்று ஈரான் கூறுகின்றது.

இதுபற்றிப் பேசிய டிரம்ப், “எனக்கு அவசரம் இல்லை. நாம் விரும்புவது கிடைக்கவில்லை என்றால், நாம் வேறு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Summary

Dont trust enemy's promises says Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.